Sunday, 10 June 2018

தேர்தல் வந்தால் எத்தனை பேர் பிச்சிகிட்டு வெளியே வருவர் என்பது தெரியம்- அழகிரி


சென்னை: தேர்தல் வந்தால் எத்தனை பேர் வெளியே வருவர் என்பது தெரியும் என்று கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான அழகிரி தெரிவித்தார்.




திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் இத்தனை ஆண்டுகளில் இரண்டு மூன்று முறை மட்டுமே கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தயாளு அம்மாவை சந்தித்தார்.

அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் மு.க.அழகிரி சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும்.

உண்மையான தொண்டர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்றார். அண்மையில் திமுகவில் நநடைபெற்ற போராட்டங்களின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினை அழகிரி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...