Sunday, 10 June 2018

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களா நீங்க உஷார்., தொடரும் முறைகேடுகள்.,அரசு வைத்த அதிரடி ஆப்பு .,இனி ஒன்னும் முடியாது ..!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை,போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டு என தொடர்ந்து முறைகேடு நடப்பதாக குற்றங்கள் எழுந்துவருகிறது.



மேலும் ரேஷன் கடைகளில் உள்ள பயனாளியின் பெயர்களை போலியாக பயன்படுத்தி பொருட்களை வாங்கி முறைகேடு நடைபெறுகிறது

இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான உணவுபொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர் .



இந்த முறைகேடுகளை முற்றிலும் தடுக்க பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ரேஷன் கடைகளில் எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்றாலும் பயனாளிகள் மட்டுமே வாங்கமுடியும் .
அதற்கு அவர்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.கைரேகை ஒத்து போகவில்லையெனில் பொருட்கள் வழங்கப்படாது.
மேலும் அவர்கள் வாங்கும் பொருட்களை பற்றிய தகவலும் நேரடியாக அரசின் பார்வைக்கு சென்று விடும் .



இவ்வாறு பயனாளிகளின் பெயரை பயன்படுத்தி நடக்கும் முறைகேடுகளை தடுக்க இந்த திட்டம் ஒரு சில மாதங்களில் நடைமுறை படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மாநிலம் முழுவதும் 34,772 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தப்படுகிறது.
இதன் மூலம் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் .

From one India

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...