Saturday, 26 May 2018

மூட்டு வலி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!


இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 மில்லியன் மக்கள் ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டு வீக்க வலியால் அவஸ்தைப்படுகிறார்கள். ஆர்த்ரிடிஸ் என்பது ஒரு வகையான மூட்டு நோய். இது பெரும்பாலும் 45 வயதிற்கு மேல் தான் ஒருவரைத் தாக்கும். ஒருவருக்கு மூட்டு பிரச்சனைகள் வருவதற்கு உடல் பருமனும் ஓர் காரணம். அதோடு மரபணு காரணிகள், வளர்சிதை மாற்றத்தில் உள்ள மாற்றங்கள் மற்றும் செக்ஸ் ஹார்மோன்கள் போன்றவைகளும் தான்.


ஒருவருக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், அது மூட்டுப் பகுதியில் வீக்கம், தாங்க முடியாத கடுமையான வலி, மூட்டு அசைவுகளில் சிரமத்தை சந்திப்பது, பலவீனமான மூட்டு இணைப்புக்கள் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். ஆர்த்ரிடிஸ் பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த உணவுகள் மூட்டு இணைப்புக்களில் உள்ள பிரச்சனையை தீவிரமாக்கிவிடும். 

மீன் 
    ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ள நோயாளிகள் தினமும் 1 கிராம் மீன் எண்ணெயை உட்கொள்வதன் மூலம், ஆர்த்ரிடிஸ் வலி குறைவதோடு தடுக்கப்படும். மேலும் மீன் எண்ணெயில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், மூட்டுக்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேண்டுமானால் அடிக்கடி மீன்களை வாங்கி சமைத்தும் சாப்பிடலாம். இதனாலும் ஆர்த்ரிடிஸைக் குறைக்கலாம்.

மஞ்சள் 
      ஆய்வுகளில் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதோடு, மூட்டு அழற்சியைத் தடுத்து குறைப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனையைக் கொண்டவக்ரள் 2 கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வர, ஆர்த்ரிடிஸைத் தடுக்கலாம்.

பசலைக்கீரை 
    பசலைக்கீரை ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் வலியை சந்திப்போருக்கு மிகவும் நல்லது. இந்த கீரையை உட்கொண்டால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் சந்திக்கும் வலி குறையும். பசலைக்கீரையில் உள்ள வைட்டமின் கே, எலும்பு மற்றும் குருத்தெலும்புகளில் இருக்கும் வைட்டமின் கேவை சார்ந்துள்ள புரோட்டீன்களுக்கு அவசியமானதாகும். எனவே வைட்டமின் கே குறைபாடு உடலில் இருந்தால், எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளில் உள்ள புரோட்டீன் சரியாக வேலை செய்யாமல், மூட்டு வளர்ச்சியைப் பாதித்து, ஆர்த்ரிடிஸ் அபாயத்தை அதிகரிக்கும்.

பூண்டு மற்றும் வெங்காயம் 
   பூண்டு ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை தடுக்க உதவும். அல்லிசின் பண்புகள் நிறைந்த காய்கறிகளான பூண்டு மற்றும் வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இவற்றை அன்றாட உணவில் சேர்த்து வர, அது மூட்டு வலி, அழற்சி மற்றும் குருத்தெலும்பு பாதிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம்.

இஞ்சி 
   மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, உடலில் வெப்பத்தை அதிகரிப்பதோடு, அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இஞ்சி தசை வலி மற்றும் மூட்டுக்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், இஞ்சியை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.


பழங்கள் மற்றும் காய்கறிகள் 
     வைட்டமின் சி கொலாஜன் வளர்ச்சி மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு அவசியமான முக்கிய சத்தாகும். கொலாஜன், மூட்டு மற்றும் எலும்புகளில் உள்ள குருத்தெலும்புகளில் இருக்கும் முக்கிய பொருளாகும். எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, ப்ராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் கீரைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது.

எண்ணெய்கள் 
      நட்ஸ் எண்ணெய்களான வால்நட்ஸ் எண்ணெய், கனோலா எண்ணெய், நெய், சோயா பீன்ஸ் எண்ணெய், ஆளி விதை எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் மூட்டு அழற்சியைக் குறைக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலி மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் பிடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கும். எனவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்.

ஆதாரம் tamil.boldsky.com

நாவல் பழம் , சிறுநீரக கற்கள்

நாவல் பழம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் கிடைக்கும்.


இது மிரட்டாசிஏ குடும்பத்தை சேர்ந்தது. நாவல் பழம் ஊதா நிறத்தை கொண்டது. மேலும் இது கசப்பு மற்றும் இனிப்பு கலந்து ஒரு தனி சுவையை தரும். 


நீரிழிவு


   நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நாவல்பழம் பெரும் பயனை அளிக்கிறது. இதிலுள்ள குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீட்டால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதிலும் நாவல்பழக் கொட்டையை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, தண்ணீர் மற்றும் பாலில் கலந்து குடித்து வரலாம்.

இரும்புச்சத்து 


    இதில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. நாவல் பழம் இயற்கையாகவே இரத்தத்தை சுத்திகரிக்கப் பயன்படுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தையும் நிலையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

வைட்டமின் 


    இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிக அளவில் உள்ளதால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கண்கள் 

   நாவல் பழம் கண்களுக்கும் நல்ல பயனை தருகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும். நாவல் பழம் மட்டுமின்றி, அதன் விதை, இலைகள் மற்றும் பட்டை அனைத்தும் பல விதங்களில் பயன் அளிக்கிறது. நாவல் பழத்தில் வேர் முதல் கொட்டை வரை அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது.

சிறுநீரக கற்கள்

       நாவல் பழம் சர்க்கரை நோயை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிறுநீரகக் கற்களையும் இது இருந்த இடம் தெரியாமல் கரைத்துவிடும். தயிருடன் நாவல் பழ கொட்டையின் பவுடர் சேர்த்து சாப்பிட்டு வர கிட்னி ஸ்டோனை உடைக்க பயன்படுகிறது.

வயிற்றுப்போக்கு 

          நாவல் பழ கொட்டையின் பவுடர் உடன் பால் கலந்து தடவி வர முகப்பருவை போக்கும். நாவல் மரப்பட்டை மற்றும் நாவல் பழக்கொட்டை, அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சிகிச்சைக்கு பயன்படுகிறது. இந்த பழத்தில் பல நற்குணங்கள் உள்ளன. இதன் சாறு நினைவாற்றலை அதிகரிக்கப் பயன்படுகிறது. மேலும் அனீமியா, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது. அது மட்டுமின்றி பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது.

சாப்பிடும் முறை

     நாவல் பழத்தில் வெள்ளை மற்றும் பிளாக் சால்ட் தூவி சாப்பிடலாம். சந்தையில் பல வடிவங்களில் இது கிடைக்கும் - ஜாமுன் ஜாம், முரப்பா ஜெல்லீஸ், மற்றும் இன்னும் பல வகைகளில் நாவல் பழத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் உள்ளன. அவற்றை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

யார் சாப்பிடக்கூடாது? 
     
      அறுவை சிகிச்சைக்குப் போகும் நோயாளிகள் இந்த பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். பிறகு லோ சுகராகிவிடும். வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். பால் சாப்பிடுவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் இந்த பழத்தின் மூலம் ஏற்படும் கரை விரைவில் போகாததால் கவனமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின் பல் துலக்குவது நல்லது.

முந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடுமா.....

எந்த பலகாரங்கள், பாயாசம் மற்றும் இனிப்பு வகைகள் என எடுத்தாலும் அதில் முந்திரி பருப்பு இல்லாமல் நாம் அலங்கரிப்பது கிடையாது. காரணம் அந்த அளவுக்கு இதன் சுவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். முந்திரி பருப்பில் உள்ள ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு இதில் எண்ணற்ற விட்டமின்களும் தாதுக்களும் அடங்கியுள்ளன.


நன்மைகள்

   இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது. இதில் அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் களைப்படையாமல் உற்சாகமாக இருப்பீர்கள். முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் அதிகளவில் ட்ரைப்டோபோஃன் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பை தூண்டி மனநிலையை அமைதியாக்குகிறது. மேலும் ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டா பாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது. இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது என்று 2014 ல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனால் வெளியிடப்பட்ட ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. எனவே இதை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம். இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. இதில் உள்ள லுடின் மற்றும் ஜேக்ஸாந்த்தின் பொருள் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் காக்கிறது. அதே நேரத்தில் கண்புரை வராமல் தடுக்கிறது.

உடல் எடை 

       1 அவுன்ஸ் பச்சை முந்திரி பருப்பில் 155 கலோரிகள் உள்ளன. எனவே இதை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது நம்மளுக்கு அதிகளவில் உடல் எடை கூட வாய்பில்லை. மருத்துவ எக்ஸ்பட்ஸ் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு போதும் உங்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்க என்கிறார்கள். மற்ற வால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில் ஏற்படுத்துவதில்லை. பெண்கள் ஒரு அவுன்ஸ் (4 கிராம்) அல்லது 10% அளவு பெண்கள் தினமும் இதை எடுத்துக் கொண்டு வந்தால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். உணவில் உப்பு சேர்த்து வறுக்கப்பட்ட முந்திரி பருப்பிற்கு பதிலாக லேசாக வெறுமனே வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு நல்லது. நொறுக்கு தீனிகளில் சேர்க்கப்படும் விலங்கு கொழுப்புகள் புரோட்டீனுக்கு பதிலாக முந்திரி பருப்பை ஸ்நாக்ஸ் ஆக எடுப்பது சிறந்தது.

எவ்வளவு சாப்பிடலாம்? 

      நீங்கள் உங்கள் உணவில் முந்திரி பருப்பை சேர்க்க நினைத்தால் ஒரு கைப்பிடியளவு பச்சையாக முந்திரி பருப்பை எடுக்கலாம். அப்படி இல்லையென்றால் சைடிஸாக உணவில் சேர்த்தல், பச்சை பீன்ஸ், சாலட்ஸ், பாயாசம் போன்றவற்றில் சேர்த்து கூட முந்திரி பருப்பின் முழு நன்மைகளையும் பெறலாம்.

எனவே நீங்கள் சரியான அளவில் முந்திரி பருப்பை எடுத்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பை எடுத்தாலே போதும் உங்கள் உடல் எடையை உங்கள் கைக்குள் வைத்து அசத்தலாம்.

ஆதாரம் tamil.boldsky.com

தொடா்ந்து உச்சத்தில் பயணிக்கும் பெட்ரோல், டீசல் விலை


           பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.80.95 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.72.74 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
           கா்நாடகா சட்டசபை தோ்தலுக்கு பின்னா் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது. 
            எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக உயா்ந்து வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 

             இந்நிலையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 15 பைசா உயர்ந்து ரூ.80.95 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 16 பைசா உயர்ந்து ரூ.72.74 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...