புதுடில்லி: இந்தியாவின் 16 மாநிலங்களில் நிலத்தடிநீரில்சிறுநீரகத்தை பாதிக்க செய்யும் யுரேனியம் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலைகழகத்தின் புவியியல் பேராசிரியர் வெங்கோஷ் தலைமையில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , குஜராத் மாநிலம் உட்பட இந்தியாவின் 16 மாநிலங்களில் கிணற்று நீரில் யுரேனியம் அளவு குறித் சோதனை நடத்தி உள்ளனர். இதில் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான குடிநீர் தரத்தை விட இந்தியா முழுவதும் நிலத்தடி நீரில் அதிக செறிவு கொண்ட யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு லிட்டர் நீரில் சுமார் 30 மைக்ரோகிராம் வரையில் யுரேனியம் இருக்கலாம் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் அதிக யுரேனியம் கொண்ட நீரினை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் சிறுநீரக கோளாறு ஏற்பட் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் "இந்த ஆய்வுகளின் முடிவுகள் இந்தியாவின் தற்போதைய நீர் தர கண்காணிப்பு திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன என வெங்கோஷ் கூறினார்.
No comments:
Post a Comment