Sunday, 5 August 2018

இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி

இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்

1 - இன்ஸ்டாகிராம் செயலியை திறக்க வேண்டும். 
2 - செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். 
3 - இனி Your Activity ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். 
4 - ஃபேஸ்புக் போன்றே, இங்கு நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் உங்களது பயன்பாட்டை விவரிக்கும் அட்டவணை காணப்படும். 
5 - இனி திரையில் உள்ள ஏதேனும் ஒரு பாரை க்ளிக் செய்து ஒரு நாளுக்கான விவரங்களை செட் செய்து கொள்ளலாம். 
6 - உங்களுக்கு வேண்டுமெனில், தினமும் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து கொண்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

ஃபேஸ்புக்கில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி

1 - ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.
2 - செட்டிங்ஸ் பக்கம் செல்ல வேண்டும்.
3 - ஃபேஸ்புக்கில் உள்ளYour Time ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்ய.
4 - குறிப்பிட்ட சாதனத்தில் உங்களது ஃபேஸ்புக் பயன்பாடு அட்டவணை வடிவில் வெளியிடப்படுகின்றன.
5 - இங்கு இருக்கும் எந்த பாரை க்ளிக் செய்தாலும் குறிப்பட்ட நாளில் நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்தினீர்கள் என்பதை பார்க்க முடியும்.
6 - உங்களுக்கு வேண்டுமெனில், தினமும் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து கொண்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் 2018 F8 நிகழ்வில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் சில வாரங்களில் புதிய அம்சம்த்திற்கான சோதனை துவங்கப்பட்டது.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அம்சம் எவ்வாறு பயன்படுத்த 
ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களுக்கான அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலி.
 - சீராக வேலை செய்யும் இன்டர்நெட் இணைப்பு.

மேற்கொள்ள வேண்டியவை: 

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்ய முதலில் ஒரு வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்ய வேண்டும்.

வாய்ஸ் க்ரூப் கால் செய்ய: 
1 - ஹோம் ஸ்கிரீனில் இருந்து வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும். 
2 - நீங்கள் அழைக்க வேண்டிய காண்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும். 
3 - வலது புறம் காணப்படும் வாய்ஸ் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். 
4 - அழைப்பு இணைக்கப்பட்டதும், வலது புறத்தில் உள்ள “add participant” பட்டனை க்ளிக் செய்து நீங்கள் சேர்க்க வேண்டிய கான்டாக்ட்களை சேர்த்துக் கொள்ளலாம். 
5 - நீங்கள் அழைக்க வேண்டிய மற்றொரு காண்டாக்ட்-ஐ தேர்வு செய்து Add பட்டனை க்ளிக் செய்யலாம்.
 6 - தொடர்ந்து அழைப்பாளர்களை அதிகரிக்க 4-வது வழிமுறையை பின்பற்றலாம்.

க்ரூப் வீடியோ கால் செய்ய:

 1 - ஹோம் ஸ்கிரீனில் இருந்து வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும். 
2 - கால்ஸ் டேப் சென்று டையலர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதனை திரையின் கீழ் உள்ள வலது புறத்தில் பார்க்க முடியும். 
3 - இங்கு நீங்கள் வீடியோ கால் செய்ய வேண்டிய முதல் நபரை தேர்வு செய்து வீடியோ பட்டனை க்ளிக் செய்து அவருடன் வீடியோ கால் துவங்க வேண்டும். 
4 - இனி, “add participant” பட்டனை க்ளிக் செய்து இரண்டாவது நபரை தேர்வு செய்து add பட்டனை க்ளிக் செய்யலாம். 
5 - தொடர்ந்து அழைப்பாளர்களை அதிகரிக்க 4-வது வழிமுறையை பின்பற்றலாம். குறிப்பு: அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும்.

முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !
மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.
நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு ‘ப்ரோத்ரோம்பின்’ என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு. இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.
கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.
கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல… மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.
கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது. கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !
இத்தகைய கல்லீரலை காப்பாற்ற மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும். மாமிசம் அதை உண்பதால் பற்பல வியாதிகள் வருகின்றன எனவே மாமிசம் உண்பதை எல்லா விதங்களிலும் தவிர்போம். பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.
உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும். நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...