Thursday, 14 June 2018

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுபவரா.... கட்டாயம் படியுங்கள்


ஃபேஸ்புக்கில் ஊருக்கு போவதாக ஸ்டேட்ட்ஸ் போட்டவரின் வீட்டில் இருசக்கர வாகனம், ஊர். 5 லட்சம் பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரமலதா. இவர் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறந்த தம்பி உடன் பெங்களூரு ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வருகிறார். 



சமீபத்தில் வார இறுதிநாளில் கோபிசெட்டிபாளையம் சென்ற பிரமேலதா, பெங்களூரிலிருந்து புறப்படும் போது ஊருக்கு போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்ஸ் அப்டேட் செய்திருந்தார். 

ஊருக்கு சென்று விட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு பிரேமலதா வந்த பார்த்த போது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.



வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை. வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்த போது ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.57,000 ரொக்கம் ஆகியவை காணவில்லை. 

இதனால் அதிரிச்சியடைந்த பிரேமலதா ஆர்.டி. நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தான் ஊருக்கு போன சமயத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளயப்படிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 

மேலும், அவர் ஃபேஸ்புக்கில் தனது ஸ்டேட்டஸை பார்த்த பிறகு தான் இந்த கொள்ளைச்சம்பவத்தில் திருடர்கள் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் தெரிவித்துள்ளார். பக்கத்து வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பதால், இது திட்டமிட்ட கொள்ளைச்சம்பவம் என பிரமேலதா தனது புகாரில் கூறியுள்ளார். 

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பகிரப்படும் தனிநபர் பற்றிய தகவல்களை ஆராய்வதற்கு என்றே பலரும் பெரியளவில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நமது நிகழ்நேர அனுபவங்கள் மற்றும் தகவல்கள் பரிமாறப்படும் போது அதை சமூகவிரோதிகள் சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில், நமது சமூகவலைதள கணக்கு விவரங்களை மூன்றாவது நபர் பார்க்காமல் இருக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வலைதள நிறுவனங்கள் கட்டமைத்துள்ளன. அதை அறிந்து வைத்திருப்பது நமது முக்கிய கடமையாகும். 

திரைப்படங்களில் வடிவேலு செய்த பல திருட்டு காமெடிகள் இதுபோன்ற சம்பவங்களின் பின்னணியில் உருவானவை தான். அது தற்போது நிஜமாகியுள்ளது. பெங்களூரில் நடந்திருந்தாலும், இந்த திருட்டு சம்பவம் பல வலைதள பயன்பாட்டாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆதார் எண் இல்லாவிட்டால் என்ன செய்வது?

Highlights


  • வெர்சுவல் ஐடி என்ற புதிய அடையாள எண்ணை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்ய உள்ளது.
  • ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வெர்சுவல் ஐடி வசதி ஆதார் ஆணைய இணையதளத்தில் கிடைக்கும்.
  • ஆதார் தகவல்களை மேலும் பாதுகாப்பானதாக ஆக்கும்


.
  ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடியை பயன்படுத்தலாம் என்று மத்திய தொலைத்தொடர்ப்புத் துறை அறிவித்துள்ளது. 

  புதிய சிம் கார்டுகள் வாங்குவது மற்றும் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை உறுதிசெய்வது போன்ற தேவைகளுக்கு அடையாளச் சான்றாக ஆதார் எண் கட்டயாமாக உள்ளது. 

 இதற்கு மாற்றாக வெர்சுவல் ஐடி என்ற புதிய அடையாள எண்ணை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்ய உள்ளது. ஆதார் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் உருவாக்கப்படும் 16 இலக்க எண் வெர்சுவல் ஐடி எனப்படுகிறது. இதனை ஆதார் எண்ணுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். 

  தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஆதார் எண் தேவைப்படும் இடங்களில் இந்த எண்ணை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வெர்சுவல் ஐடி வசதி ஆதார் ஆணைய இணையதளத்தில் கிடைக்கும்.

 இதனை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பும் (COAI) வரவேற்றுள்ளது. இந்த வெர்சுவல் ஐடி பயன்பாடு ஆதார் தகவல்களை மேலும் பாதுகாப்பானதாக ஆக்கும் என்று தொலைத்தொடர்புத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

பதிவுசெய்யப்படாத டிக்கெட்களை புக் செய்ய புதிய அப் அறிமுகம்!!

  ரயில்களில் பதிவுசெய்யப்படாத டிக்கெட்களை புக் செய்யவும், ரத்து செய்யவும் அப் ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. 



  ரயில்களில் பதிவுசெய்யப்படாத டிக்கெட்களை புக் செய்தல், அவற்றை ரத்து செய்தல், ஆர்-வாலட்டில் பணம் செலுத்துதல், புதிய பிளாட்பார்ம் டிக்கெட்கள் மற்றும் சீசன் டிக்கெட்களைப் பெறுதல், பிளாட்பார்ம் டிக்கெட்கள் மற்றும் சீசன் டிக்கெட்களைப் புதுப்பித்தல், அக்கவுண்டை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மொபைல் அப்பை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. 

  ‘UTS On Mobile’ என்ற இந்த மொபைல் அப்பை பயன்படுத்துபவர்கள் புக் செய்த டிக்கெட்டை பிரின்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, அப்பில் இருக்கும் ‘Show Ticket’ வசதி மூலம் மொபைலில் உள்ள டிக்கெட்டையே காட்டலாம். 

  ‘Centre for Railway Information System’ உருவாக்கியுள்ள இந்த அப் மூலம், முன்கூட்டியே டிக்கெட்களை பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அப் கூகுள் பிளே ஸ்டோரிலும், விண்டோஸ் ஸ்டோரிலும் இலவசமாக கிடைக்கிறது.

தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில்

பராந்தசுபுரம் என்றும் இராஜபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர்கொண்டு விளங்கும் தாராபுரம் நகர் சரித்திர புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்நகரில் அமராவதி நதிக்கரையில் (ஆண் பொருணை நதி) கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆவார். முன்பு ஒரு காலத்தில் பார்வதி தேவியார் திருமண நாளில் பிரம்மா, திருமால் முப்பத்தி முக்கோடி தேவர்கள்

முதல் யாவரும் மேரு மலையில் ஒன்று சேர்ந்தார்கள். சுமை ஏறிய மேரு மலையின்; வடதிசை இறங்கியது. இதனால் தென்புலி மேல் எழுந்தது. பூமியை சமநிலை ஆக்க சிவபெருமான் அகஸ்தியரை தென் மலையான பொதிகைக்கு செல்லுமாறு கட்டளையிட்டார். அகஸ்தியரும் பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள கொங்கு நாடான தாராபுரத்தில் அமராவதி நதிக்கரையில தங்கினார்.
தினசரி ஒவ்வொரு நாளும் ஆர்மாத்த பூஜையை தங்கும் ஊர்களில் நடத்தி வந்தார். அச்சமயத்தில் அமராவதி ஆற்றங்கரையில் தன்னுடைய பூஜைக்கு உரிய சிவலிங்கத்தை காசியில் இருந்து சீடர்கள் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டதால் சிவ பூஜையை முடிக்க தன்னுடைய திருக்கரங்களால் அமராவதி புனித நீரின் மணலை பிடித்து வைத்து பூஜித்தார். ஆகவே அதற்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று. மேலும் தனது சீடர்கள் காசியில் இருந்து லிங்கத்தை தாமதமாக எடுத்து வந்ததால் இவர் பிடித்து வைத்த லிங்கமே மூலஸ்தானம் ஆகியது. சீடர்கள் கொண்டு வந்த லிங்கம் வலது பக்கம் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் மகாபாரத புராண கதையில் அஞ்ஞான வாசம் பாண்டவர்கள் இவ்வ+ரில் தங்கி வழிபட்டனர். இத்திருக்கோயிலானது மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் ஒருங்கே அமைந்தது.
இக்கோவிலை புத்தூர் திருமலைசாமி பகவான் போன்றோர் வழிபட்டுள்ளனர். இக்கோவிலின் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் திருமண தடை, வேலைவாய்ப்பு, புத்திர தோஷம் மற்றும் சித்த பிரமை தோஷம் நிவர்த்தி ஆகும். சுகல ஷேமங்களும் பெறுவார்கள். புண்ணிய நதியாகிய அமராவதியல் நீராடி தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் அடைவர்.
நன்றி நவநீதன்

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்



அமராவதி அணை  :::  14.06.2018  10.34 AM நிலவரப்படி



அணையின் இருப்பு
 [ அடி ]
65.72 Cusecs
அதிகரித்துள்ளது
அணைக்கு நீர் வரத்து
 [ கன அடி ]
958 Cusecs
குறைந்துள்ளது
அணையின் வெளியேற்றம்
 [ கன அடி ]
856 Cusecs
அதிகரித்துள்ளது

உப்பாறு அணை

உப்பாறு என்பது இந்தியாவில் தமிழகத்தின் தாராபுரம் தாலுகாவிலுள்ள குடிமங்கலம் ஒன்றியம் அரசூர் பகுதியில் துவங்குகிறது. ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த ஆற்றுக்கான உப்பாறு அணை பனமரத்துப்பாளையம் கிராமம், கெத்தல்ரேவ் பகுதியில், 1,100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 500 கிலோ முதல் 800 கிலோ வரை தினமும் மீன் பிடிக்கப்படுகிறது.
உப்பாறு அணை
தாராபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் - கெத்தல்ரேவ் - பனமரத்துப்பாளையம் கிராமத்தில் உள்ளதுதான் உப்பாறு அணை. முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உப்பாற்றின் குறுக்கே 1100 ஏக்கரில்,இந்த அணை கட்டப்பட்டது. 1965 -ல் தொடங்கி 1968 -ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 30 அடி. நீளம் 2,300 மீ . நீர்பிடிப்பு பகுதி 350 ச.மைல்கல் ஆகும். அணையின் மூலம் நேரடியாக 6100 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இரண்டு கால்வாய்கள் உண்டு.
     இந்த அணை நிறைந்து வெளியேறும் நீர் - அமராவதி ஆற்றுடன் இணைந்து, காவரி ஆற்றுடன் வங்கக்கடலில் கலக்கும். P.A.P பாசன திட்ட அணைகளில் இதுவும் ஒன்று ஆகும். P.A.P. தொகுப்பு அணைகள் அனைத்தும் நிரம்பிய பின் வெளியேறும் உபரி நீர், வீணாக அரபிக்கடலில் கலந்து வந்தது. இந்த உபரி நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வகையில் உப்பாற்றின் குறுக்கே அணைகட்டி, அந்த உபரி நீர் சேமிக்கப்பட்டு பாசனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்காலத்தில் பல்வேறு குளறுபடிகளால் P.A.P முக்கிய தொகுப்பு அணைகளே நிரம்புவதில் இடர்பாடுகள் உண்டு. மேலும் 1994-ல் இந்த பாசனப்பகுதிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு விட்டது. அத்தோடு இந்த உப்பாறு அணைக்கு வரும் உபரி நீர் நின்று போனது. அன்றிலிருந்து இந்த அணையை நம்பி இருந்த சுமார் 22,000 ஏக்கர் நிலங்களின் விவசாய நிலை கேள்விக்குறியானது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் வீணாக நீர் திறக்கவேண்டிய கட்டாயத்துக்கு அணை நிருவாகம் தள்ளப்பட்டபோது. வேறு வழி இன்றி உப்பாறு அணைக்கு சில நாள் நீர் திறக்கப்பட்டது.
      இன்னும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இந்த அணையில் விளையும் மீன் தனி சுவை கொண்டது. அணையில் நீர் இருந்தால் தினமும் 500 கி.மீன் பிடிக்கப்படும்.

வாட்ஸ்-அப்பிற்கு வருகிறது தடை - மத்திய அரசு ஆலோசனை

வாட்ஸ்-அப்பில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.



தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதனால், சமூக வலைத்தளங்களான டிவிட்டர், முகநூல், வாட்ஸ்-ஆப் ஆகியவற்றை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.  மேலும், அதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதிகளை பலரும் பயன்படுத்துகின்றனர்.
 
கடந்த 2016ம் ஆண்டு இந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடதினர். அப்போது, தங்களின் ஓவ்வொரு அசைவையும் தங்களின் கூட்டாளிகளுக்கு வாட்ஸ்-அப் மூலமே அவர்கள் பகிர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏனெனில் வாட்ஸ்-அப் கால் மற்றும் வீடியோக்களை சேகரிக்கவும் முடியாது, அதை ஒட்டுக்  கேட்கவும் முடியாது. எனவே, தீவிரவாதிகள் வாட்ஸ்-அப்பை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
 


எனவே, வாட்ஸ் அப் கால் மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. முதல் கட்டமாக இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தடை கொண்டு வரப்படுகிறது.  முதலில் காஷ்மீரில் இந்த தடை அமுலுக்கு வரும் எனத்தெரிகிறது.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...