Wednesday, 22 August 2018

கோவாவில் அரசு பணி தேர்வு எழுதிய அனைவரும் 'ஃபெயில்' - தேர்வுத் துறை அதிர்ச்சி

கோவாவில் கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு முடிவு வெளியானதில் தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் பெயிலாகியிருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டதாரிகள் மட்டும் இத்தேர்வு எழுத தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் 100 க்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் கூட அவர்கள் பெறவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவாவின் கணக்குத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ''கோவா அரசு அலுவலகங்களில் கணக்காளர் பதவிக்கு 80 காலியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான தேர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வு எழுதிய ஒரு விண்ணப்பதாரர் கூட தேர்ச்சியடையவில்லை.
சாதாரண கணக்காளர் பதவிக்கான தேர்வு விளம்பரத்தை கணக்குகள் இயக்குநரகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தது. 5 மணிநேர தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, கணக்கு தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு 100 மதிப்பெண்கள். இதில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதற்கு தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் இவர்கள் வாய்மொழி நேர்முகத் தேர்வுக்கு முன்பு நடத்தப்படும் இறுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்.'' என்று கணக்குகள் இயக்குநர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் கோவா பொதுச் செயலாளர் பிரதீப் பட்கோங்கர் தேர்வு முடிவு குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதலில் தேர்வு முடிவு வெளியாக ஏன் இவ்வளவு காலம் ஆனது என்ற கேள்வி எழுகிறது. தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் ஒரு தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால் மாநிலத்தின் கல்வி முறை சீர்குலைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. இது பட்டதாரிகளை உருவாக்கும் கோவா பல்கலைக்கழகத்திற்கும் வணிக கல்லூரிகளுக்கும் மிகப்பெரிய அவமானம்'' என்று பிரதீப் பட்கோங்கர் தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரண நிதிக்காக சிறப்பு லாட்டரி: கேரள அரசு முடிவு

கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டுவதற்காக சிறப்பு லாட்டரி திட்டத்தை நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது. உணவுப் பொருட்கள், ஆடைகள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், நிதியுதவி என கேரள மக்களுக்கு நாடுமுழுவதும் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது.
எனினும் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரவும், அதற்கு தேவையான நிதியை திரட்டவும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜிஎஸ்டி மீது 10 சதவீத கூடுதல் வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுபோல், வெள்ள நிவாரண நிதி தேவைக்காக, சிறப்பு லாட்டரி சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி ஏற்கப்படுமா? - முடிவெடுக்கவில்லை மத்திய அரசு

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசின் அனுமதி தேவை. இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகு கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன. மத்திய அரசு ரூ.600 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்துள்ளன.
மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் அழுகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு தரப்பினரும், நிவாரணப் பொருட்கள், நிதியுதவி செய்து வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் 600 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்ய முன் வந்துள்ளது.
இதனை அந்நாட்டு துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய அரசு அமீரகத்தில் ஏராளமான கேரள மக்கள் பணி புரிந்து வருவதால் அவர்களின் துயரில் பங்கு கொள்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இந்த நிதியுதவியை கேரள அரசு தானாக பெற முடியாது. வெளிநாடுகளில் இருந்து யார் நிதி பெற வேண்டும் என்றாலும், வெளியுறவு அமைச்சகத்தின் முறையான அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி வெளிநாடுகள் சார்பில் அளிக்கப்படும் இதுபோன்ற நிதியை பெறுவதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுப்பது மிகவும் அவசியம்.
மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கேரள அரசால் இந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.இதற்கு முன்பு இயற்கை பேரிடர் நடந்தபோது பல சமயங்களில் வெளிநாடுகள் நிதி அளிக்க முன் வந்தன. அப்போது மத்திய அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்தது.
2004-ம் ஆண்டு சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது அமெரிக்க நிதியுதவி அளிக்க முன்வந்தது. அப்போதைய மத்திய அரசு அதனை ஏற்க மறுத்ததாக அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ரோன் சென் குறிப்பிடுகிறார். எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொண்டு சமாளிக்கும் நிலைமை இந்தியாவுக்கு இருப்பதால் வெளிநாட்டு நிதி தேவையில்லை என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
ஆனால் தேவையை கருதி சில சமயங்களில் வெளிநாட்டு நிதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண் கூறுகையில் ‘‘வெளிநாடுகளில் இருந்து பேரிடர் காலங்களில் நிதி பெறுவதற்கு என தனியாக விதிமுறைகள் ஏதும் இல்லை. எனினும் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் கிடைத்தால் நிதியை பெற்றுக் கொள்ளலாம்’’ எனக் கூறியுள்ளார்.
மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் கேரள வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிலை என்பது போதை பொருளா…?

வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. 

கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர்.
இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும்.
கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை ‘அவுன்ஸ்’ வீதம் மூன்று நாள் குடித்து வந்தால் வாத, பித்த கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைக்கும். உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலை பாரம் உணவு செரியாமை,மந்தம், குரல் கம்மல் வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும். இந்த வெற்றிலையை பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து உபயோகிக்கும் போது தாம்பூலம் என்கிறோம்
இந்த தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும்.
அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.
அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும்.
மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும்.
காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும்.
பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும்.
வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை, பாக்குகளை கூட்டிக்குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து அச்சாற்றை மூக்கில் இரண்டு துளி விட தலை நோய், தலைபாரம், தலையில் நீர்தேக்கம் ஆகியவை நீங்கும்.
இரண்டு வெற்றிலையுடன் 50 கிராம் ஊற வைத்த சிவப்பு அரிசியை சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். சிறுவர்களுக்கு மலக்குற்றம் நீங்கும். அதோடு இருமல், மூச்சுதிணறல், கோழைக்கட்டு ஆகியவை நீங்குவதோடு இதை பெண்கள் உண்டால் ஆண்கள் மீது பற்றும் ஆண்கள் உண்டால் பெண்களின் மீது பற்றும் உண்டாகும்.
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு என்பது போதை பொருள் அல்ல அதில் புகையிலை சேர்க்கும் போதே போதை பொருளாக உருவெடுக்கிறது..!

இந்தியாவில் அணுகுண்டு சோதனை


1948 – இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது.
1955 – அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது.
1957 – விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா அணு ஆராய்ச்சி மையமானது.
1962 – நங்கலில் முதலாவது கனநீர் இயந்திரம் நிறுவப்பட்டது.
1963 – 40 மெகாவாட் திறன் கொண்ட சிரஸ் அணு உலை பழுதடைந்து சீர் செய்யப்பட்டது.
1967 – யுரேனியத்தை வெட்டி எடுக்கவும், பிரிக்கவும் யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது.
1969 – தாராப்பூர் அணுசக்தித்திட்டம் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 வர்த்தக இயக்கத்தை தொடங்கின.
1971 – கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மயம் தொடங்கப்பட்டது.
1972 – பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் பூர்ணிமா ஆராய்ச்சி ரியாக்டர் தொடங்கப்பட்டது.
1973 – இராசத்தான் அணுசக்தி மையம் யூனிட் 1 வர்த்தக இயக்கத்தை தொடங்கியது.
1974 – தார் பலைவனத்தில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில் முதலாவது இந்திய அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
1998 – அடுத்தடுத்து 2 நாட்களில் 5 நிலத்தடி அணுகுண்டுகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
Narendra Modi – 2014 till date
Manmohan Singh – 2004-14
Atal Bihari Vajpayee – 1998-2004
IK Gujral – 1997-98
HD Deve Gowda – 1996-97
AB Vajpayee – 1996
PV Narasimha Rao – 1991-96
Chandra Shekhar – 1990-91
VP Singh – 1989-90
Rajiv Gandhi – 1984-89
Indira Gandhi – 1980-84
Charan Singh – 1979-80
Morarji Desai – 1977-79
Indira Gandhi – 1966-77
Gulzarilal Nanda – 1966-66
Lal Bahadur Shastri – 1964-66
Gulzarilal Nanda – 1964
Jawaharlal Nehru – 1947-64
கடந்த 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியா முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தி யது. அதன்பின், 1998-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் அடுத்தடுத்து 5 அணுகுண்டு சோதனைகளை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடத்திக் காட்டினார். அதன்பின், 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றும் கூட உலக அரங்கில் இந்தியா அணு சக்தி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை..!

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா..?

இளநீர், `பூலோகக் கற்பக விருட்சம்’ என்று ஏன் அழைக்கப்படுகிறது ?
இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்… எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.

இளநீர்
இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை?சித்த மருத்துவர் சிவராமன்
“தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.
சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்” என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்
செய்தி:விகடன்

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...