Monday, 4 June 2018

கிரகதோஷம் நீக்கும் கலியுகக் கடவுள், தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில்

தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோயில்களில் சக்தி வாய்ந்தது, காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் - கிரகதோஷம் நீக்கும் கலியுகக் கடவுள் !!



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோயில்களில் சக்தி வாய்ந்தது, காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில். கிஷ்கிந்தை ராஜ்யத்தில், சுக்ரீவனுக்கு மதியூகம் கொண்ட அமைச்சனாக, சொல்லின் செல்வனாக, உற்ற நண்பனாக விளங்கிய அனுமன், ராமரை தரிசனம் பெற்ற பின்னர் ஆஞ்சநேயராகப் பெயர்கொண்டு, சிரஞ்சீவியாகி, இன்றும், அனைவராலும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
வாயு புத்திரனாகிய ஸ்ரீஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர். விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் இணைக்கும் பிரமாண்ட வடிவம் எடுத்துத் தன் ஆற்றலை நிரூபித்தவர். கொடிய அசுரர்களையும், தீவினை புரிவோரையும் எளிதாக அழிக்கக்கூடிய பலம் பொருந்தியவர் என்றாலும், முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் போற்றும் வகையில் பணிவையும், எளிமையையும் கைக்கொண்டவர்.
கொங்குவள நாட்டில் விராட மன்னர் ஆட்சி புரிந்த தலம் தாராபுரம். புராண வரலாற்றில் இடம் பெற்ற ஊர். பஞ்சபாண்டவர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் ஒரு வருடம் அஞ்ஞானவாசம் மேற்கொண்டபோது யாருக்கும் தெரியாமல் மாறுவேடம் பூண்டு வாழ்வதற்காக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்தான் விராட நகர் என்ற இன்றைய தாராபுரம்.
தாராபுரம் நகரானது வளமையான வயல்களால் சூழப்பட்டதாகும். வான் உயர்ந்து வளர்ந்த கனி மரங்களையும் தன்னகத்தே கொண்டது. சோலைகளும், நந்தவனங்களும் சூழ்ந்திருக்க வற்றாத ஜீவநதியான அமராவதி ஆறு இங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. தாங்கள் புனைவேடம் பூண்டிருந்த காலத்தில் தங்களது உடைமைகளையும், ஆயுதங்களையும் தில்லாபுரியம்மன் ஆலயத்தில் ஒளித்து வைத்திருந்தார்கள்பஞ்ச பாண்டவர்கள்.
இத்தகைய புராண பிரசித்தி பெற்ற இடத்தில்தான் மாத்வ சம்பிரதாயத்தில் வந்த ஸ்ரீவியாசராஜர் எனும் மகான் இத்தலத்தில் அனுமனை பிரதிஷ்டை செய்ய விரும்பி அவ்வாறே செய்தார். பாரத தேசம் முழுவதும் 732 இடங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்த அவர் தாராபுரத்தையும் அவற்றில் ஒன்றாகத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், இத்தலத்தின் பெருமையை எளிதாக உணரலாம். அந்தவகையில் 89வது மூர்த்தமாக விளங்குகிறார் இந்த அனுமந்தசுவாமி.
இது அடர்ந்த காட்டுப் பகுதியாக விளங்கியதால் ‘காடு’ என்ற அடைமொழியுடன், இந்த ஆஞ்சநேயர் ‘காடு ஹனுமந்தராயன்’ என்று போற்றப்பட்டார். 1810ல் கோவை கலெக்டராக விளங்கிய டீலன் துரை தாராபுரத்தில் முகாம் அமைத்திருந்தபோது அவருக்கு ராஜபிளவை என்ற கடுமையான நோய் ஏற்பட்டது. அப்பொழுது அவரைச் சுற்றியிருந்தவர்கள் இந்த ஆஞ்சநேயமூர்த்தியின் பராக்கிரமத்தை விளக்கிச் சொல்ல, அவர்களுடைய யோசனைப்படி அனுமந்தசுவாமியை அவர் தரிசனம் செய்ய, உடனே அந்த நோய் அவரை விட்டு விலகியது. இந்த நன்றிக்கடனாக, அவர் சுவாமிக்குத் தன் சொந்தப் பொறுப்பில் கர்ப்பகிரகத்தை கட்டிக் கொடுத்தாராம். 
திருப்பதி வெங்கடாசலபதியை போன்று 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டு பிரமாண்டமாக விளங்குகிறார் அனுமந்தசுவாமி. இவரது இரண்டு பாதங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இடுப்பில் மணி சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இடுப்புப் பட்டையில் கத்தி செருகப்பட்டிருக்கிறது. வலது கை அபயம் காட்டி அருள்கிறது. இடது கையில் சௌகந்தி மலர் ஏந்தியிருக்கிறார். கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகள் அணிசெய்கின்றன. திருமுகம் வடகிழக்கு திசை நோக்க, அருள்பாலிக்கிறார். கிரீடத்தின் பின்புறத்தில் பட்டா கத்தி ஒன்றும் உள்ளது. தலைக்கு அருகே வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன.
ஆஞ்சநேயருக்கு அடுத்து இடது புற மண்டபத்தில் ராமர் சந்நதி உள்ளது. சீதாதேவி, ஆஞ்சநேயர் சகிதமாக ராமர் திருக்காட்சி நல்குகிறார். ராமருக்கு அர்ச்சனைகள் செய்தபின் அனுமனுக்குச் செய்யப்படுகிறது. இது ஆரம்ப காலம் தொட்டு நடைபெறும் இந்தக் கோயிலின் சம்பிரதாயமாகும். துங்கபத்ரா நதிக்கரையில் மந்த்ராலயம் என்கிற தலத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகையை (புனித மண்) கொண்டு வந்து இந்த ராமர் சந்நதியை அமைத்திருக்கிறார்கள். அரச மரம் சுமார் 250 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. நரசிம்ம தீர்த்த குளமும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது.
நவகிரக தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆஞ்சநேயரும், கணபதியும்தான் என்று சாஸ்திரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. நெய்தீபம், வெண்ணெய், வடை மாலை ஆகியவற்றைப் படைத்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் நவகிரக தோஷம் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பது ஆயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. ஆஞ்சநேயரின் திருவடிகளை உளமாற துதித்து வணங்கிவந்தால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கியே செல்லும். தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண். 04258 220749.
- லிங்கம் சின்னசாமி

From Dharapuram FB

கவிதைகள் தினகரன்பொன்கதிர்



நான் தெற்கு வடக்கு அலைகிறேன்
நீ கிழக்கே சென்று தொலைகிறாய்!
நான் பூக்கள் வளர்க்கும் காட்டிலே!
உன் பட்டாம்பூச்சி வந்து ஆளவா!
என்னை ஆளுமா!



#தினகரன்பொன்கதிர்

கோவையை கலக்கும் பைக் டாக்சி... டூவிலருக்கு டிரைவர்.. கி.மீக்கு ரூ. 3தான் கட்டணம்!

கோவை: கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய போக்குவரத்து நெரிசலில் விரைவில் செல்லும் வகையில் கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் கட்டணத்தில் கோவையில் முதல் முறையாக பைக் டேக்சியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பெங்களூரை மையமாக கொண்டு ராப்பிடோ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முதல் முறையாக கோவையில் பைக் டேக்சியை அறிமுகம் செய்து உள்ளது. 

ஓலா மற்றும் ஊபர் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு செயலி தான் இந்த டேக்சிக்கும் பயன்படுத்தும்படி செய்து உள்ளனர். 

நமது கைபேசியில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, நாம் இருக்கும் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் அவர்களே டூவீலரில் வந்து நம்மை அழைத்து செல்கின்றனர்.

வண்டி ஓட்டுனர் "கேப்டன்" இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சிறிதாக துவங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது 16 மாநகரங்களில் செயல்பட்டு வருகின்றது. இது தமிழகத்தில் தற்போது கோவை, திருச்சி மற்றும் மதுரையிலும் செயல்பட்டு வருகின்றது. 

ராப்பிடோ நிறுவனம் கோவையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களே ஆகின்றன. வண்டி ஓட்டுனரை கேப்டன் என்று அழைப்பது வழக்கம். இங்கு 28 ஆண் கேப்டன்களும், இரண்டு பெண் கேப்டன்களும் பணிபுரிந்து தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.


கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் ஒரு கிலோ மீட்டருக்கு மூன்று ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதனால் யார் வேண்டுமானாலும் இதனை சுலபமாக பயன்படுத்த முடிகிறது.

  சராசரியாக கோவையில் ஒரு நாளைக்கு 200 முதல் 300 நபர்கள் ராப்பிடோ ஆப் மூலம் பயணம் செய்து வருவதாக கூறுகின்றனர்.
 இதுமட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தலைக்கவசமும்,ஹேர் நெட்டும் வழங்கப்படுகிறது.மேலும் ராப்பிடோவில் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் விபத்துகாப்பீடு வழங்கப்படுகிறது.



 ஆண்ட்ராய்ட் போன் கட்டாயம் ஓட்டுனரை கண்காணிக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் அவர்கள் செல்லும் இடத்தினை டிராக் செய்யவும் முடியும். ராப்பிடோவில் கேப்டனாக இணைய ஓட்டுனர் உரிமம், சட்டப்படியான ஆவணங்கள் மட்டும் போதுமானது. ஆனால் வண்டி மட்டும் 2007 க்கு பிறகு வந்த வண்டியாக இருக்க வேண்டும். மேலும் ஆண்ட்ராய்ட் போன் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது ராப்பிடோ நிறுவனத்தின் விதிமுறைகள் ஆகும்.

     பயணிகளிடமிருந்து பெறும் பணத்தை கேப்டன்களே வைத்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி பல ஊக்கத்தொகை கேப்டன்களுக்கு வழங்கப்படுகிறது.ராப்பிடோவிற்கு பயணிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேரங்களில் முன்பதிவு செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார்.

     பெரும் வரவேற்பு தற்போது உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உச்சத்தை அடைந்து வரும் நிலையில் இந்த டேக்சி பல மக்களின் குடும்ப செலவை சற்றே குறைக்கும் வகையிலேயே உள்ளது. மேலும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் இந்த நிறுவனம் வழங்கி உள்ளது. இதனால் கோவை மக்கள் பெரும் மகிழ்ச்சியினில் உள்ளனர். இந்த புதிய அறிமுக திட்டத்திற்கு அவர்கள் வரவேற்பினையும் அளித்துள்ளனர்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...