கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த வேண்டும் என தமிழகம் தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால், அணைக்கு பாதுகாப்பு இல்லை என்றுக் கூறி இந்த கோரிக்கையை ஏற்க கேரளா மறுத்து வருகிறது.
கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருவதால் 26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக அங்கு மழை குறைந்துள்ளால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து, சற்று இயல்பு நிலை திரும்பி வருகிறது.
அதேசமயம் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறில் இருந்து திறக்கப்படும் நீர், இடுக்கி அணையை சென்று அடையும். இடுக்கி அணைக்கு கூடுதல் நீர் வந்து சேதம் ஏற்படும் என்பதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்குமாறு கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் கேரளாவின் பாதுகாப்பு கருதி முல்லைப்பெரியாறு அணையில் தற்போது கூடுதல் நீர் தேக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வழக்கமா தேக்கப்படும் அளவான 136 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி 136.40 அடி என்ற அளவில் தண்ணீர் உள்ளது.
தமிழகத்துக்கு வழக்கமாக 2,200 கன அடி நீர் திறக்கப்படும். ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தமிழகத்துக்கு விநாடிக்கு 4,419 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
142 அடியை வரை மட்டுமே முல்லைப்பெரியாறில் தேக்கி வைக்க முடியும் அதற்கு மேல் தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்லும் என்பதால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
THE HINDU
No comments:
Post a Comment