கனமழையால் உருகுலைந்துள்ள கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு மழை சற்று குறைந்திருந்த ந நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கனமழை பாதிப்பையடுத்து இந்த ஆண்டு ஓணம் கொண்ட்டாட்டங்களை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு முதல்வர் பினராயி விஜயன் இதனை அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘கனமழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை கேரளா சந்தித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். வீடு, உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஓணம் பண்டிகையை அரசு சார்பில் வழக்கம் போல் கொண்டாடுவது சரியாக இருக்காது. எனவே இந்த ஆண்டு அரசு சார்பில் நடக்கும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெறும்’’ எனக் கூறினார்.
From THE HINDU
No comments:
Post a Comment