Monday, 6 August 2018

பயிர்களுக்கு மண்புழு உரம் இடுதல்


🌿 பயிருக்கு ஏற்றவாறு உரங்கள் இட்டால் மிக அதிக லாபத்தை நம்மால் ஈட்ட முடியும் அதாவது எந்த பயிருக்கு எவ்வளவு மண்புழு உரம் இட வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

மக்காச்சோளப்பயிருக்கு ......

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். பின்னர் 40 நாட்கள் கழித்து 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

கடலை, வெங்காயப் பயிருக்கு...

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் இரண்டாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம். மூன்றாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

மரவள்ளி கிழங்கிற்கு......

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். 150 நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.

கரும்பு மற்றும் வாழை பயிருக்கு.....

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 500 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம். 180 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.

வெற்றிலை பயிருக்கு....

🌱 கொடி தூக்கிய 60-ம் நாளில் கொடி ஒன்றுக்கு கால் கிலோ மண்புழு உரம் இடலாம்.

🌱 அதன் பின்னர் 100 நாள் கழித்து கால் கிலோ, 150 நாள் கழித்து கால் கிலோ, 200 நாள் கழித்து கால் கிலோ மண்புழு உரம் இட்டு வர நல்ல விளைச்சல் கிடைக்கும்.

மிளகாய், கத்தரி பயிருக்கு....

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். பின்னர் 60 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தை மூன்று முறை பிரித்து இடலாம்.

மலர் வகைகளுக்கு...

🌱 குறுகிய கால மலர் வகைகளான செவ்வந்தி, மரிக்கொழுந்து, மருகு, வாடாமல்லி, கோழிக்கொண்டை போன்றவற்றிற்கு, அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

🌱 நீண்டகால மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, காக்கட்டான், முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், அரளி போன்றவற்றிற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடி ஒன்றிற்கு 250 கிராம் மண்புழு உரத்தை இட்டு வந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

👉 மண்புழு உரம் இடுவது என்பது மண்ணிற்கேற்ப மாறுபடும். மேலே குறிப்பிடப்பட்டவை பொதுவாக இடும் அளவு ஆகும்.

👉 மண்புழு உரத்தை அதிகம் இட்டாலும் தவறில்லை. பயன் கிடைக்கும்.

👉 மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மண்புழு உரம் இட வேண்டிய அவசியம் இருக்காது. பண்ணைக்கழிவுகளை மட்டும் நிலத்தில் போட்டு வந்தால் போதுமானது.

- Karuppiah

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...