Sunday, 22 July 2018

பொலிவு தரும் சீரகம்

# ஆப்பிள் பழத் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமான அளவில் இருக்கிறது. இந்த பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதில் சிறந்தது.
# தொடர்ந்து பூண்டு சாப்பிட்டுவந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
#   ரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கு பீட்ரூட், புடலங்காய், பசலைக் கீரை, பேரீச்சம்பழம், அவரை, பச்சைக் காய்கறிகள், துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, முருங்கைக் கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
# வெங்காயம், நெல்லிக்காய், வெந்தயக் கீரை, பனங்கற்கண்டு, மாதுளம் பழம், நாவற்பழம், கோவக்காய், பச்சைப் பயறு, மோர், இளநீர் போன்றவை உடலின் சூட்டைத் தணிக்கும்.
# சீரகப் பொடியை வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட வயிற்று எரிச்சல் மட்டுப்படும்.
# சீரகத் தண்ணீர் குடித்துவர சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் ஜொலிக்கும்; கூந்தல் வலுப்பெறும். முடியின் வேர்க்கால்கள் வளர்வதற்கும் சீரகத் தண்ணீர் உதவும்.
# மலச்சிக்கலைப் போக்க, சீரகத்தில் உள்ள நார்ச்சத்து உதவும்.
# சீரகத்தை லேசாக வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும்.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...