Wednesday, 30 May 2018

இந்தியாவில் விமான நிலைய வேலைகளை கவனிக்க ரோபோ

விஸ்டாரா நிறுவனம் இந்திய விமான நிலையங்களில் ராடாஎன்ற என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை பண அமர்த்த உள்ளது. 

டாடா சன்ஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கமான விஸ்டாரா விமான சேவை நிறுவனம் இந்திய விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பிரத்யேக ரோபோக்களை அறிமுகம் செய்யப்போகிறது. 




முதலில் டெல்லி விமான நிலையத்திற்கு ஜூலை 5ஆம் தேதி அறிமுகமாகிறது ராடா என்ற பெயர் கொண்ட ரோபோ. இது பயணிகளுக்கு உதவுவது, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது, பொழுதுபோக்க பயன்படுவது போன்ற பல வேலைகளை செய்யும். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் (Artificial Intelligence) கொண்ட இந்த ரோபோ பயணிகளின் வரவேற்பை பொறுத்து மேலும் மேம்படுத்தப்படும் என்றும் விஸ்டாரா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...